மரவள்ளி சாகுபடி தொழில்நுட்பங்கள் :
மரவள்ளி சாகுபடியில் அதிக லாபம் பெற கீழ்கண்ட தொழில்நுட்பங்களை கடைபிடிக்கவேண்டும் .
விதைக்கரணை தேர்வு :
நோய் தாக்காத மையப்பகுதியிலிருந்து 15 செ.மீ. நீளம் 8 செ.மீ .பருமன் உள்ள குச்சிகள் .
மரவள்ளி நாற்றங்கால் :
மேட்டுப்பாத்திகளில் 5-7 செ .மீ.வரிசைக்கு வரிசை ,செடிக்கு செடி இடைவெளி இருக்குமாறு கரணைகளை நடவேண்டும் .விதைக்கரணைகள் ஊன்றிய 7 நாட்களில் முளைக்க ஆரம்பிக்கும் 15 - 20 நாட்களில் வயலில் நட்டுவிடவேண்டும் .விதைக்கரனைகள் முளைவிட்டதும் தேமல் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் அத்தகைய செடிகளை களைந்து நல்ல கரணைகளை நடவு செய்யவேண்டும் .நாற்றங்கால் அமைப்பதினால் கீழ்கண்ட நன்மைகளை பெறலாம் .
1. தரமான விதக்கரனைகளை பெறலாம் .
2. தேமல் நோய் தாக்கிய கரணைகளை ஆரபம்பத்திலேயே கண்டறிந்து நீக்கலாம்
3. வயலில் சரியான செடிகளின் எண்ணிக்கை
4. ஒருமுறை களை எடுக்கும் செலவும் . இருமுறை நீர்பாசனம் செய்யும் செலவும் குறையும் .
ஒரு ஏக்கரில் பயிரிட 16 சதுர மீட்டர் நாற்றங்கால் போதுமானது.
விதைகரணை நேர்த்தி :
விதைக்கரனைகளின் அடிப்பாகத்தை கார்பண்டாசிம் என்ற மருந்து 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து 15 நிமிடம் நனைத்து பின் நடவேண்டும் . ஒரு ஏக்கரில் நடவுசெய்ய 80-120 கிராம் மருந்து தேவைப்படும் .
வறட்சியை தாங்கி வளர :
மானாவாரியில் பயிரிடப்படும் மரவள்ளி பயிர் வறட்சியை தாங்கி வளர 1 லிட்டர் தண்ணீரில் 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு என்ற விகிதத்தில் கலந்த கரைசலில் காரணிகளை சுமார் 20 நிமிடங்கள் நனைத்து பின் நடவேண்டும் .
அதிக அளவில் கிழங்கு பிடிக்க :
ஒரு ஏக்கரில் நடவு செய்ய தேவையான கரணைகளை 30 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் மற்றும் 30 கிலோ செம்மண்ணை 60 லிட்டர் தண்ணீ ரில் கலந்து அக்குழம்பில் கரணைகளின் 5 செ .மீ . அளவு நனைத்து நடவேண்டும் .
ஏக்கருக்கு தேவையான விதைக்கரணைகள் :
கிளைக்கும் தன்மையுள்ள ரகம்
மானாவாரி - இடைவெளி 75*75 செ .மீ.-- 7111 எண்கள்
இறவை -- 60*60 செ .மீ. -- 11111 எண்கள்
கிளைக்கும் தன்மை குறைவாக உள்ள ரகம்
மானாவாரி - இடைவெளி 90*90 செ .மீ.-- 4938 எண்கள்
இறவை -- 90*75 செ .மீ. -- 5925 எண்கள்
மரவள்ளி சாகுபடியில் அதிக லாபம் பெற கீழ்கண்ட தொழில்நுட்பங்களை கடைபிடிக்கவேண்டும் .
விதைக்கரணை தேர்வு :
நோய் தாக்காத மையப்பகுதியிலிருந்து 15 செ.மீ. நீளம் 8 செ.மீ .பருமன் உள்ள குச்சிகள் .
மரவள்ளி நாற்றங்கால் :
மேட்டுப்பாத்திகளில் 5-7 செ .மீ.வரிசைக்கு வரிசை ,செடிக்கு செடி இடைவெளி இருக்குமாறு கரணைகளை நடவேண்டும் .விதைக்கரணைகள் ஊன்றிய 7 நாட்களில் முளைக்க ஆரம்பிக்கும் 15 - 20 நாட்களில் வயலில் நட்டுவிடவேண்டும் .விதைக்கரனைகள் முளைவிட்டதும் தேமல் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் அத்தகைய செடிகளை களைந்து நல்ல கரணைகளை நடவு செய்யவேண்டும் .நாற்றங்கால் அமைப்பதினால் கீழ்கண்ட நன்மைகளை பெறலாம் .
1. தரமான விதக்கரனைகளை பெறலாம் .
2. தேமல் நோய் தாக்கிய கரணைகளை ஆரபம்பத்திலேயே கண்டறிந்து நீக்கலாம்
3. வயலில் சரியான செடிகளின் எண்ணிக்கை
4. ஒருமுறை களை எடுக்கும் செலவும் . இருமுறை நீர்பாசனம் செய்யும் செலவும் குறையும் .
ஒரு ஏக்கரில் பயிரிட 16 சதுர மீட்டர் நாற்றங்கால் போதுமானது.
விதைகரணை நேர்த்தி :
விதைக்கரனைகளின் அடிப்பாகத்தை கார்பண்டாசிம் என்ற மருந்து 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து 15 நிமிடம் நனைத்து பின் நடவேண்டும் . ஒரு ஏக்கரில் நடவுசெய்ய 80-120 கிராம் மருந்து தேவைப்படும் .
வறட்சியை தாங்கி வளர :
மானாவாரியில் பயிரிடப்படும் மரவள்ளி பயிர் வறட்சியை தாங்கி வளர 1 லிட்டர் தண்ணீரில் 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு என்ற விகிதத்தில் கலந்த கரைசலில் காரணிகளை சுமார் 20 நிமிடங்கள் நனைத்து பின் நடவேண்டும் .
அதிக அளவில் கிழங்கு பிடிக்க :
ஒரு ஏக்கரில் நடவு செய்ய தேவையான கரணைகளை 30 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் மற்றும் 30 கிலோ செம்மண்ணை 60 லிட்டர் தண்ணீ ரில் கலந்து அக்குழம்பில் கரணைகளின் 5 செ .மீ . அளவு நனைத்து நடவேண்டும் .
ஏக்கருக்கு தேவையான விதைக்கரணைகள் :
கிளைக்கும் தன்மையுள்ள ரகம்
மானாவாரி - இடைவெளி 75*75 செ .மீ.-- 7111 எண்கள்
இறவை -- 60*60 செ .மீ. -- 11111 எண்கள்
கிளைக்கும் தன்மை குறைவாக உள்ள ரகம்
மானாவாரி - இடைவெளி 90*90 செ .மீ.-- 4938 எண்கள்
இறவை -- 90*75 செ .மீ. -- 5925 எண்கள்