Wednesday, 18 March 2015

பஞ்சகாவ்யா  :
                            பயிர்களுக்கு   தேவையான  அனைத்து சத்துக்கள்  மற்றும்  வளர்ச்சி ஊக்கிகள்  அதிக அளவில் உள்ள  நல்ல உயிர்  உரம். இது 75% உரமாகவும்,25% பூச்சி  மருந்தாகவும்  வேலைசெய்கிறது .
                           பயன்படுத்தும்போது   விளைச்சல் அதிகரிக்கிறது . நோய்,பூச்சி தாக்குதல் இல்லை.  அதிக சுவையுள்ள விளைபொருட்கள் . பூக்கள்  அதிக மணத்துடன் நீண்ட நேரம் வாடாமல் இருக்கும்.



தயாரிக்கும் முறை :

1. பசு  சாணம்                                                  :5 கிலோ
2. பசுமாட்டு   சிறுநீர்                                    : 3 லிட்டர்
3.பசுமாட்டு  பால்                                          : 2 லிட்டர்
4.பசுமாட்டு  தயிர் (புளித்தது)                  : 2 லிட்டர்
5. பசுமாட்டு  நெய்                                         :1 லிட்டர்
6.கரும்புச்சாறு (அ )                                      : 3 லிட்டர்    
  நாட்டு சர்க்கரை 1/2 கிலோ 3லிட்டர் நீரில் கரைத்துக்கொள்ளவும்
7. இளநீர்                                                            :3 லிட்டர்  
8.வாழைப்பழங்கள்                                      : 12
9.கள்                                                                    :2 லிட்டர்
                                                        ஒரு  பிளாஸ்டிக்  வாளியில்  சாணி மற்றும்  நெய்யை  பிசைந்து  3  நாட்கள்  வைக்கவும். நான்காம் நாள்   வாயகன்ற  சிமெண்ட் தொட்டி (அ ) பானையில்  அனைத்து  பொருட்களுடன்  போட்டு  நன்கு கரைத்து  கலக்கி  துணியால் மூடி  நிழலில்  வைக்கவும் . தினமும்  அடிக்கடி  கலக்கி வரவும். 15 நாட்களில்   பஞ்சகாவ்யா  தயாராகிவிடும்.  இதை  6 மாதம் வரை தினமும் கலக்கிவிட்டு பயன்படுத்தலாம் .
 பயன்படுத்தும்  முறை :
                     100 லிட்டர்  நீருக்கு  3 லிட்டர்   பஞ்சகாவ்யா  என்ற  விகிதத்தில் கலந்து  தெளிக்கலாம் .







No comments:

Post a Comment